
லக்னோ,
உத்தரபிரதேசத்தின் சம்பல் மாவட்டத்தில் கடந்த மாதம் நடந்த வன்முறையில் 4 பேர் உயிரிழந்தனர். இந்த சூழ்நிலையில் வன்முறையால் பாதிக்கப்பட்ட சம்பல் நகருக்கு ராகுல் காந்தி இன்று செல்ல முயன்றார்.
ஆனால், அவர் சம்பல் மாவட்ட எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார். ராகுல் காந்தியுடன், பிரியங்கா காந்தி, மற்றும் அவர்களுடன் சேர்த்து காங்கிரஸ் எம்.பி.க்கள் 5 பேரும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.