சென்னை: சமூக நீதியை நிலைநாட்டும் அரசாக முழுமையான அர்ப்பணிப்புடன் திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆதி திராவிடர், பழங்குடியினர் நலத்துறையின் மாநில கண்காணிப்புக் குழு கூட்டம் நடைபெற்றது. அதில், மதிப்போடும், உரிமையோடும், சுயமரியாதையுடனும் நாம் இருக்க பெரியாரும், அம்பேத்கருமே காரணம். கடந்த 4 ஆண்டுகளில் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 421 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
The post சமூக நீதியை நிலைநாட்டும் அரசாக முழுமையான அர்ப்பணிப்புடன் திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!! appeared first on Dinakaran.