சென்னை: சபரிமலை செல்லும் பக்தர்கள் வசதிக்காக, சென்னை - கொல்லம் இடையே 4 சிறப்பு ரயில்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளன.
பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் இந்த ஆண்டு மண்டல காலம் வரும் 16-ம் தேதி தொடங்குகிறது. இதை முன்னிட்டு, நாளை மாலை கோயில் நடை திறக்கப்பட உள்ளது. இந்நிலையில், சபரிமலை செல்லும் பக்தர்கள் வசதிக்காக, சென்னை - கொல்லம் இடையே 4 சிறப்பு ரயில்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.