சந்து, பொந்தெல்லாம் பணம்... லஞ்சம் வாங்கி குவித்த மனைவி... வீடியோவுடன் அப்ரூவர் கணவர்...

2 hours ago 2
நகராட்சி பெண் அதிகாரி ஒருவர் தான் லஞ்சமாக வாங்கிய லட்சக்கணக்கான பணத்தை வீட்டின் டைனிங் டேபிள், பீரோ, அலமாரிகளில் கட்டுக்கட்டாக மறைத்து வைத்திருப்பதை அவரது கணவர் வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளார் பூஜை அறையில் பல கட்டுகள், வேஸ்ட் பேக்கில் சில நோட்டு கட்டுகள் என கட்டுக்கட்டாக பணம் இருப்பது நகராட்சி பொறியாளர் ஒருவரின் வீட்டில் தான். தெலங்கானா மாநிலம் மணிகொண்டா நகராட்சியில் பொறியாளராக பணியாற்றி வருபவர் திவ்யா ஜோதி. 7 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீபத் என்பவரை திருமணம் செய்துக் கொண்ட திவ்யாஜோதிக்கு ஒரு மகன் உள்ளான். தனது மனைவி திவ்யாஜோதி லட்சம் லட்சமாக லஞ்சம் வாங்குவதாகவும், அந்த பணத்தை வீட்டின் பல்வேறு பகுதிகளில் மறைத்து வைத்திருப்பதாகவும் கூறிய ஸ்ரீபத் அதனை வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளார். லஞ்சம் வாங்கக் கூடாது என பலமுறை சொல்லியும் தனது மனைவி கேட்கவில்லை எனவும், லஞ்சப்பணம் இல்லாமல் ஒரு நாள் கூட அவர் வீட்டிற்கு வந்ததில்லை எனவும் தெரிவித்துள்ளார் ஸ்ரீபத். கணவருக்கு தெரியாமல் இருக்க வேண்டும் என்பதற்காக பீரோ மற்றும் அலமாரியில் புடவைகளுக்கு அடியிலும், பேப்பர்களுக்கு இடையேயும், பூஜை அறையின் சாமி படங்களுக்குப் பின்னால் என எல்லா இடத்திலும் பணத்தை மறைத்து வைத்திருந்ததை வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார் ஸ்ரீபத். ஷூ ஸ்டாண்ட், வேஸ்ட் பேக்கைக் கூட விட்டு வைக்காமல் அதிலும் பணத்தை கட்டுக் கட்டாக மறைத்து வைத்திருப்பதாகவும் புகார் தெரிவித்துள்ளார். வீட்டில் மொத்தமாக 80 லட்சம் ரூபாயை, தனது மனைவி மறைத்து வைத்திருப்பதாக போட்டுக் கொடுத்துள்ளார் . சம்பந்தப்பட்ட நகராட்சி பெண் அதிகாரியிடம் விசாரணை நடை பெற்று வருகின்றது.
Read Entire Article