சென்னை: சத்துணவு மையங்களில் கட்டமைப்பு வசதிகளை திமுக அரசு மேம்படுத்தவில்லை என குற்றம் சாட்டியுள்ள முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், பழுதடைந்த எரிவாயு அடுப்பு மற்றும் உபகரணங்களுக்குப் பதிலாக புதிய எரிவாயு அடுப்பு மற்றும் உபகரணங்களை வழங்கிடுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தி.மு.க. அரசால் நிதிநிலை அறிக்கைகள் வாயிலாகவும், கொள்கை விளக்கக் குறிப்புகள் வாயிலாகவும் வெளியிடப்படும் அறிவிப்புகள் வெத்துவேட்டு அறிவிப்புகளாக இருக்கின்றனவே தவிர செயல்படுத்தும் அறிக்கைகளாக இல்லை. இதற்கு பல உதாரணங்களைச் சுட்டிக்காட்டலாம்.