சத்தீஷ்கார்: தலைக்கு ரூ.45 லட்சம் பரிசு தொகை அறிவிக்கப்பட்ட நக்சல் தலைவர் படுகொலை

2 weeks ago 9

பிஜாப்பூர்,

சத்தீஷ்காரின் பிஜாப்பூர் மாவட்டத்தில் நேஷனல் பார்க் பகுதியில், நக்சலைட்டுகளின் முக்கிய தலைவர் ஒருவர் பாதுகாப்பு படையினருடனான மோதலில் சுட்டு கொல்லப்பட்டார். இதுபற்றி போலீசார் கூறும்போது, அந்த நபர் பாஸ்கர் ராவ் என்ற மயிலரப்பு அடெல்லு என்ற மண்டுகுல பாஸ்கர் ராவ் என அடையாளம் காணப்பட்டு உள்ளார்.

அவரை பிடித்து தருபவர்களுக்கு ரூ.45 லட்சம் பரிசு தொகை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அவருடைய உடலை கைப்பற்றிய படையினர், ஏ.கே.-47 ரக துப்பாக்கி, வெடிபொருட்கள் மற்றும் பிற ஆயுதங்களையும் கைப்பற்றினர்.

அந்த பகுதியில் வேறு நக்சலைட்டுகள் யாரும் பதுங்கி உள்ளனரா? என தேடுதல் பணியும் தொடர்ந்து வருகிறது. இதே பகுதியில் மற்றொரு மூத்த நக்சலைட்டு தலைவரான சுதாகர் என்ற கவுதம் என்பவரை வன பகுதியில் வைத்து கடந்த வியாழக்கிழமை படையினர் சுட்டு வீழ்த்தினர்.

இதேபோன்று, கடந்த மே 21-ந்தேதி நக்சலைட்டு அமைப்பின் பொது செயலாளரான பசவ ராஜு என்பவர் சுட்டு வீழ்த்தப்பட்டார். அவருடன் 26 நக்சலைட்டுகள் சுட்டு கொல்லப்பட்டனர். இந்நிலையில், 3 வாரங்களில் நக்சலைட்டுகளின் முக்கிய தலைவர்களின் வரிசையில், 3-வது முக்கிய நபர் என்கவுன்ட்டரில் சுட்டு கொல்லப்பட்டு உள்ளார்.

Read Entire Article