‘‘சட்டம் ஒழுங்கில் கூடுதல் கவனம் தேவை’’ - தமிழக அரசுக்கு ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

7 months ago 19

சென்னை: “பல்லடம் அருகே ஒரே வீட்டைச் சேர்ந்த 3 பேர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசு சட்டம் ஒழுங்கு உட்பட பாதுகாப்பு நடவடிக்கைகளை முறையாக மேற்கொள்ள வேண்டும்,” என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக அரசு, மாநிலம் முழுவதும் சட்டம் ஒழுங்கில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். காரணம் தமிழகத்தில் முதியோருக்கு பாதுப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. திருப்பூர்- பல்லடம் அருகே 3 பேரை வீடு புகுந்து கொலை செய்த சம்பவம் பொது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தோட்ட வீட்டில் இருந்த முதியவர் உட்பட 3 பேரை மர்ம நபர்கள் கொலை செய்துவிட்டு, நகை பணத்தை கொள்ளை அடித்து தப்பிச் சென்றுள்ளனர். இச்சம்பவம் தமிழகத்தில் முதியோர்களுக்கு மிகுந்த அச்சத்தையும், பாதுகாப்பற்ற தன்மையையும் ஏற்படுத்தியுள்ளது.

Read Entire Article