ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் திங்கள்கிழமை சுவாமி தரிசனம் செய்த நடிகையும், அதிமுக நிர்வாகியுமான கவுதமி, தான் 2026 சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவது குறித்து கட்சியின் பொதுச் செயலாளர் கே.பழனிசாமி முடிவு செய்வார் என தெரிவித்தார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் நடிகையும் அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளருமான கவுதமி திங்கள்கிழமை காலை சுவாமி தரிசனம் செய்தார். கவுதமியை அதிமுக நிர்வாகிகள் வரவேற்றனர். ஆண்டாள் சந்நிதி, பெரிய பெருமாள் சந்நிதி, நரசிம்மர் சந்நிதி, சக்கரத்தாழ்வார் சந்நிதி, ஆண்டாள் அவதரித்த நந்தவனம் ஆகியவற்றில் கவுதமி சுவாமி தரிசனம் செய்தார்.