சக்தி தழைக்கும் சிவம்

4 hours ago 2

அபிராமி அந்தாதி-சக்தி தத்துவம்

சப்த மாதர்களுடன் மட்டுமே இருக்கும் கணபதிக்கு ‘உமாங்க மலஜன்’ என்று பெயர். இதற்கு உமையம்மையின் திருமேனி அழுக்கிலிருந்து தோன்றியவர் என்பது பொருள். இவர் சப்த மாதர்களுக்கும் பாதுகாவலாகவும் மகனாகவும் திகழ்பவர். உபாசகனுக்கு ஞான சக்தியாக இருந்து உமையம்மையை எப்படி வழிபட வேண்டும் என்பதை வரையறுத்துச் சொல்பவர். மேலும் உபாசகனுக்கு குருவாகவும் திகழ்பவர். இந்த கணபதியைத் தான் அபிராமிபட்டர் காப்பில் `உமை மைந்தனே’ என்று வணங்குகிறார்.

இவருக்கு முதலில் மரியாதை செலுத்திய பிறகே சப்த மாதர்களை வணங்க வேண்டும் என்கிறது தாந்ரீக சாத்திரம். இவர் பிரம்மசர்ய விரதத்தினால் மகிழக்கூடியவர். மேலும் உடலுக்கு உள்ளும், உடலுக்கு வெளியிலும், உள்ளேயும் வெளியிலேயும் என்ற மூன்று நெறியிலேயும் வணங்கப்படுகிறார். உடலுக்குள் மூலாதாரம், ஸ்வாதிஸ்டானம், மணிபூரகம், அனாஹதம், விசுக்தி, ஆக்ஞா, பிரம்மரந்தரம், த்வாத சாந்தம், சோடசாந்தம் என்று வணங்கப்படும் போது கணபதியாகிய இவர் மூலாதாரத்தில் வணங்கப்படுகிறார். ‘மூலாதார வாசிநே நம:’ மூலாதாரத்து மூண்டு எழுகனலான குண்டலினி சக்தியாகத் திகழ்பவர்.

யோக மகேஸ்வரர் என்பவர் யோகா சனம் இட்டு அமர்ந்திருப்பார், இடுப்பிலே யோகப் பட்டை தரித்திருப்பார். மான் மழு, சின்முத்திரை, ஜானு விந்யஸ்த்த ஹஸ்த்தம் [முட்டி மீது கையை வைத்திருப்பர்]. இவரே உமையம்மையின் அருட்கட்டளைக்கு உட்பட்டு அனைத்து பக்தர்களுடைய வேண்டுதலையும் நிறைவேற்றுவார். இவர் செயலாக்கத்திறன் கொண்டவர். சைவத்தில் குறிப்பிடப்படும் சிவன் அல்ல இவர். மாயையோடு இணைந்து ஆத்ம ஞானம் அடைவதற்கு உதவுகிறவர்.

மேலும் உடலுக்கு நன்மை தரும் இவரை மனதிற்குள்ளே தியானம் செய்யும் போது மஹத், அகங்காரம், சத்தம், பரிசம், ரஸம், ரூபம், கந்தம் என்ற ஏழுவகை அறிவாகவும், உணர்வாகவும், இயக்கமாகவும் அதற்கு காரணமான உடலின் அடிப்படைத் தத்துவமாகவும் திகழ்பவர். சாக்த தத்துவத்தைப் பொருத்தவரை `சக்தி தழைக்கும் சிவம்’ (29) இவரே ஆவார். உடலியல் ஆரோக்கியத்தைத் தருவதோடு அனிமா, மகிமா, கரிமா, லகிமா, ஈஷித்துவம், வசித்துவம், ப்ராத்தி, ப்ராகாம்யம் என்ற அஷ்டமா சித்திகளையும் அருள வல்லார். இதுதான் சாக்த தத்துவத்தில் உடலைப் பாதுகாக்க உயிரை உடலுக்கு உள்ளும் புறமும் செலுத்த கற்பதே மோக்ஷம். இதற்கு துணை புரியும் இந்த வழிபாட்டை கீழ்க்கண்டவாறு அறியலாம்.

வஎண் பெயர் தத்துவம் பயன் நகரம் வாகனம் ஆயுதம் (அபய வரதம் பொது) தாண்டவம் தாது

1 ப்ராம்மி கந்தம் துணிவு காசி அன்னம் கிண்பு அக்ஷமாலை சந்தியா தாண்டவம் சுக்லம்
2 வைஷ்ணவி சப்தம் வாழ்நாள் அயோத்தி கருடன் சங்கு சக்கரம் முனி தாண்டவம் மஜ்ஜா
3 கௌமாரி ரூபம் நுகர்ச்சி மாயை மயில் வஜ்ரம் சக்தி கௌரி தாண்டவம் மாம்சம்
4 காளி பரிசம் வலி காஞ்சி பேய் சூலம் கபாலம் காளி தாண்டவம் சருமம்
5 வாராகி ரஸம் தான்யம் மதுரா யானை ஏர் உலக்கை திரிபுர தாண்டவம் அஸ்தி
6 சாமுண்டி மஹத் ஆகுநல்லூழ் அவந்தி சிங்கம் பாசம் அங்குசம் சம்வறார தாண்டவம் இரத்தம்
7 மாகேஷ்வரி அஹங்காரம் வெற்றி துவாரகை விருஷபம் மான் மழு ஆனந்த தாண்டவம் நாடி (நரம்பு)என்ற முறைப்படியே தொழுவதையே “ஆமளவும் தொழுவார்” என்கிறார்.

“எழுபாருக்கும் ஆதிபரே” என்பதனால் கணபதியையும், யோக மாகேஷ்வரரையும், சப்தமாதர்களாகிய அனைத்து சக்திகளையும் வழிபாடு செய்வதனால் இம்மை, மறுமை, இரண்டு செல்வங்களையும் அடையலாம் என்கிறார் பட்டர். இதையே ‘`எழுபாருக்கும் ஆதிபரே’’ என்கிறார்.

‘`அந்தமாக’’
“கோமள வல்லியை”
என்பதனால் சாமுண்டி
என்கிற தேவதையையும்,
“அல்லியந்” என்பதனால் மாகேஷ்வரியையும்,
“தாமரைக்” என்பதனால் வைஷ்ணவியையும்,
“கோயில் வைகும் யாமள வல்லியை” என்பதனால் காளியையும்,

“ஏதம் இலாளை” என்பதனால் வாராகியையும்
“எழுதரிய சாமள மேனி” என்பதனால் கௌமாரியையும்,
“சகலகலா மயில்” என்பதனால் ப்ராம்மியையும்,
“தன்னைத் தம்மால்” என்பதனால், ஆன்மவடிவாகிற யோ`கமாஹேஸ்வரரையும்,
“ஆமளவும்” என்பதனால் குண்டலினி சக்தி ரூபமாகிய கணபதியையும்.

“தொழுவார்” என்பதனால் வணங்கு பவர்களுக்கு“எழபாருக்கும் ஆதிபரே” என்பதனால் இவ்வுல செல்வங்களான பதினாறு பேறும், ராஜயோகமும், அதையே மனதிற்குள் தியானம் செய்தால் ஞானமும், மோட்சமும் கிட்டும் என்கிறார். அதை அடைய பிரார்த்திப்போம்.

முனைவர் பா.இராஜசேகர சிவாச்சாரியார்

The post சக்தி தழைக்கும் சிவம் appeared first on Dinakaran.

Read Entire Article