கோவையில் பெய்துவரும் கனமழையில் 5 வீடுகள் சேதம்; அமைச்சர் முத்துசாமி

3 hours ago 1

தென்மேற்கு பருவமழை கேரளாவில் வழக்கமாக ஜூன் 1ம் தேதி தொடங்கும் நிலையில் இந்த ஆண்டு 8 நாட்களுக்கு முன்கூட்டிய தொடங்கிவிட்டது. அதேபோல், தமிழகத்திலும் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் நீலகிரி, கன்னியாகுமரி, கோவை, தேனி போன்ற பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், கோவையில் பெய்துவரும் கனமழை காரணமாக 5 வீடுகள் சேதமடைந்துள்ளதாக அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், கோவையில் பெய்துவரும் கனமழையால் இதுவரை 5 வீடுகள் சேதமடைந்துள்ளன. 2 பேருக்கு சிறு காயம் ஏற்பட்டுளது. மழை தொடர்பான முன்னேற்பாடுகள் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார். மழையால் ஏற்பட்ட சேதங்களை அதிகாரிகள் கணக்கெடுத்து வருகின்றனர். இழப்பீடு வழங்குவது குறித்து மாவட்ட கலெக்டர் முடிவெடிப்பார்' என்றார். 

Read Entire Article