கோவையில் காட்டு யானை தாக்கி இளைஞர் பலி

7 hours ago 2

கோவை,

கோவை மாவட்டம் பூலுவப்பட்டியைச் சேர்ந்தவர் சுரேஷ் அபிமன்யூ. இவர் தனது நண்பருடன் டூ வீலரில் வைதேகி நீர்வீழ்ச்சிக்கு செல்லும் வழியில் உள்ள தோட்டத்திற்கு சென்றுள்ளார். அப்போது திடீரென எதிரே வந்த ஒற்றை காட்டு யானை, சுரேஷ் அபிமன்யூவை துரத்திச் சென்று தாக்கியது.

இதில், அவர் தலை மற்றும் இடுப்பில் எலும்பு முறிவு ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்து சென்ற போலீசார், சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவையில் காட்டு யானை தாக்கி இளைஞர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Read Entire Article