கோவை ஸ்டேன்ஸ் மேல்நிலைப் பள்ளிக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வெடிகுண்டு நிபுணர்கள் நடத்திய சோதனையில் போலி என கண்டுபிடிப்பு தொடர்ச்சியாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுவதால் தீவிர விசாரணை

8 months ago 43
கோவை அவிநாசி சாலையில் உள்ள ஸ்டேன்ஸ் மேல்நிலைப் பள்ளிக்கு மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மிரட்டலைத் தொடர்ந்து மாணவர்கள் பள்ளி மைதானத்தில் அமர வைக்கப்பட்டு வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தியபோது அது போலி எனத் தெரிய வந்தது. இதேபோன்று கடந்த 2 நாட்களுக்கு முன்பு முன்னாள் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு தங்கியிருந்த ஹோட்டலுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
Read Entire Article