
கோவை,
சேலம் கோட்ட ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
கோவை போத்தனூரில் ரெயில்வே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் அந்த வழியாக இயக்கப்படும் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளன. அதன்படி நாளை (புதன்கிழமை) மேட்டுப்பாளையத்தில் இருந்து மதியம் 1.05 மணிக்கு புறப்பட வேண்டிய மேட்டுப்பாளையம்-போத்தனூர் மெமு (ரெயில் எண்:- 66615) கோவை ரெயில்நிலையத்தில் பகுதியாக நிறுத்தப்படும். இந்த ரெயில் மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை ரெயில்நிலையத்துக்கு மட்டுமே இயக்கப்படும்.
போத்தனூர் ரெயில்நிலையத்தில் இருந்து மதியம் 3.30 மணிக்கு புறப்பட வேண்டிய போத்தனூர்-மேட்டுப்பாளையம் மெமு ரெயில் (எண்:-66616) கோவையில் இருந்து மதியம் 3.45 மணிக்கு புறப்படும். கேரள மாநிலம் கண்ணூரில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட திட்டமிடப்பட்ட கண்ணூர்-கோவை ரெயில் (எண்:-16607) நாளை மறுநாள் (வியாழக்கிழமை) போத்தனூருக்கு மட்டுமே இயக்கப்படும். மதுரை சந்திப்பில் இருந்து காலை 7.05 மணிக்கு புறப்படும் மதுரை-கோவை ரெயில் (எண்:-16722) போத்தனூர் வரை மட்டும் இயக்கப்படும். சொரனூர்-கோவை ரெயில் போத்தனூர் வரை மட்டுமே இயக்கப்படும். மேட்டுப்பாளையத்தில் இருந்து மதியம் 1.05 மணிக்கு புறப்படும் மேட்டுப்பாளையம்-போத்தனூர் ரெயில் (எண்:- 66615) கோவைக்கு மட்டுமே இயக்கப்படும்.
கண்ணூர் ரெயில்
கோவை-கண்ணூர் ரெயில் (எண்:-16608) வருகிற 19-ந் தேதி போத்தனூரில் இருந்து புறப்பட்டு கண்ணூர் வரை இயங்கும். கோவையில் இருந்து மதியம் 2.30 மணிக்கு புறப்பட வேண்டிய கோவை-மதுரை எக்ஸ்பிரஸ் ரெயில் (எண்:-16721) மதியம் 2.45 மணிக்கு போத்தனூரில் இருந்து புறப்படும். மாலை 4.25 மணிக்கு புறப்பட வேண்டிய கோவை-சொரனூர் பயணிகள் ரெயில் (எண்:-56603) மாலை 4.40 மணிக்கு போத்தனூரில் இருந்து புறப்படும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளது.