
கோவை,
தமிழக சட்டசபை தேர்தலை கருத்தி கொண்டு அதிமுக தற்போதே தேர்தல் பிரசார பணிகளை தொடங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணத்தை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மேற்கொள்ள இருக்கிறார். சட்டசபை தொகுதி வாரியாக ''மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்'' என்ற பெயரில் எடப்பாடி பழனிசாமி மேற்கொள்ளும் சுற்றுப்பயணத்தில் பங்கேற்க கூட்டணி கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணத்தை எடப்பாடி பழனிசாமி நேற்று கோவை மாவட்டத்தில் தொடங்கினார். மக்களின் உறுதுணையோடு தமிழகத்தில் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைக்கும் என எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை தெரிவித்தார்.
இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி இன்று கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடை பயிற்சி மேற்கொண்டு எடப்பாடி பழனிசாமி, பொதுமக்களை சந்தித்து பேசி வருகிறார்.
இன்று இரண்டாவது நாளாக கோவை வடக்கு மற்றும் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணத்தை எடப்பாடி பழனிசாமி மேற்கொள்கிறார்.