சென்னை: கோவை ஈஷா அறக்கட்டளை சார்பில் தகன மண்டபம் கட்டப்பட்டுள்ள விவகாரத்தில் அரசின் நிலைப்பாடு என்ன என்பதை தெரிவிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை ஈஷா அறக்கட்டளை சார்பில் கோவை மாவட்டம் இக்கரை போளுவாம்பட்டியில் கால பைரவர் தகன மண்டபம் என்ற பெயரில் மின் தகன மேடை அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த கிராமத்தைச் சேர்ந்த எஸ்.என்.சுப்பிரமணியன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், குடியிருப்பு பகுதிகள் மற்றும் நீர்நிலைகள் நிறைந்துள்ள இக்கரை போளுவாம்பட்டியில் ஈஷா யோகா மையம் சார்பில் கட்டப்பட்டுள்ள இந்த தகன மேடையை அகற்ற உத்தரவிட வேண்டும், என கோரியிருந்தார்.