
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே மூப்பன்பட்டி, கண்மாய்க்கரை அருகே ஒருவா் கையில் வாளுடன் இருப்பதாக, கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் வேல்முருகன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்றனர். அப்போது அங்கு கையில் வாளுடன் நின்றபடி, அரசுப் பணி செய்யவிடாமல் தடுத்ததாக கோவில்பட்டி ஆசிரமம் தெருவை சோ்ந்த கருப்பசாமி மகன் சிங்கராஜை (வயது 56) போலீசார் கைது செய்தனர்.