கோவில்பட்டியில் நகைகள் திருடிய 4 பேர் கைது: 16 ½ சவரன் தங்கம் பறிமுதல்

4 hours ago 3

தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட்ஜான் உத்தரவின்படி, கோவில்பட்டி உட்கோட்ட டி.எஸ்.பி. ஜெகநாதன் மேற்பார்வையில், கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமார், ராமச்சந்திரன் மற்றும் போலீசார் நேற்று கோவில்பட்டி, இளையரசனேந்தல் சோதனை சாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி இருசக்கர வாகனங்களில் வந்த நபர்களை நிறுத்தி விசாரணை செய்தனர்.

அதில் அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தனிஷ்லாஸ் மகன் மோகன்(எ) சகாயராஜ் (வயது 48), சென்னை பள்ளிக்கரணையைச் சேர்ந்த ரமேஷ்பாபு மகன் சதீஷ்(37), சாத்தூர் புல்வாய்பட்டி பகுதியைச் சேர்ந்த சுப்பையா மகன் முத்துராஜா(43) மற்றும் சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் மகன் பொன்முருகன்(53) ஆகியோர் என்பதும், அவர்கள் கடந்த 1.6.2025 அன்று கோவில்பட்டி இளையரசனேந்தல் ரோடு சக்கரபாணிநகரைச் சேர்ந்த கிருஷ்ணன்பிள்ளை மகன் நல்லசிவன்(67) வீட்டில் பூட்டை உடைத்து 19½ சவரன் தங்க நகைகள் மற்றும் அரை கிலோ வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை திருடிய வழக்கில் சம்பந்தப்பட்ட நபர்கள் என்பதும் தெரியவந்தது.

உடனடியாக போலீசார் மேற்சொன்ன 4 பேரையும் கைது செய்து அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி, அவர்களிடமிருந்து திருடப்பட்ட நகைகளில் சுமார் 16½ சவரன் தங்க கட்டி மற்றும் அரை கிலோ வெள்ளிக்கட்டி ஆகியவற்றை கைப்பற்றியதோடு, அவர்களை சிறையில் அடைத்தனர். மேலும் இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Read Entire Article