கோவில்பட்டியில் தொழிலாளியை மிரட்டியவர் கைது

6 months ago 19

கோவில்பட்டி, நவ. 14: கோவில்பட்டியில் தொழிலாளியை மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். கோவில்பட்டி கடலைக்கார தெருவைச் சேர்ந்தவர் கருப்பசாமி (42). கூலி தொழிலாளியான இவர், வேலாயுதபுரம் விவசாய பண்ணை அருகே நடந்து சென்று கொண்டிருந்த போது மறவர் காலனியைச் சேர்ந்த மாரியப்பன் மகன் பேச்சிமுத்து (22) என்பவர் வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி மது குடிக்க பணம் கேட்டதாக தெரிகிறது. இதுகுறித்து கருப்பசாமி, கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி பேச்சிமுத்துவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

The post கோவில்பட்டியில் தொழிலாளியை மிரட்டியவர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article