கோவில்பட்டியில் இந்திய கம்யூ. குழு கூட்டம்

2 months ago 11

கோவில்பட்டி, நவ. 13: கோவில்பட்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா குழு கூட்டம் இன்னாசிமுத்து தலைமையில் நடந்தது. மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் சேதுராமலிங்கம் பேசினார். கூட்டத்தில் 2025ம் ஆண்டுக்கான கட்சி உறுப்பினர் பதிவை நவம்பர் மாத இறுதிக்குள் முடிப்பது, கட்சி நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாடுவது, தர்மபுரியில் வரும் ஜனவரி 26ம்தேதி நடைபெற உள்ள இளைஞர் பெருமன்ற மாநாட்டு பேரணியில் அதிகளவில் இளைஞர்களை கலந்து கொள்ள செய்வது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் தாலுகா செயலாளர் பாபு, ராமகிருஷ்ணன், லெனின் குமார், ரஞ்சிதம், மாரியம்மாள், அகிலா, சுரேஷ்குமார், செல்வம், பெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post கோவில்பட்டியில் இந்திய கம்யூ. குழு கூட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article