சென்னை: காலமுறை ஊதிய உயர்வு, பதவி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மேட்டூரில் இருந்து நடைபயணம் மேற்கொண்ட 7 அரசு மருத்துவர்களை சென்னையில் போலீஸார் கைது செய்தனர்.
தமிழக அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு காலமுறை ஊதிய உயர்வு, பதவி உயர்வு மற்றும் கரோனாவில் உயிரிழந்த மருத்துவர் விவேகானந்தனின் குடும்பத்துக்கு அரசு வேலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மேட்டூரில் இருந்து சென்னைக்கு நடைபயண போராட்டத்தை தமிழ்நாடு அரசு மருத்துவர்களின் சட்ட போராட்ட குழுவினர் அறிவித்தனர்.