கோடையை குளுமையாக்கலாம்!

2 weeks ago 3

நன்றி குங்குமம் தோழி

* கோடையில் தக்காளி நிறையச் சாப்பிடவும். உடம்பை குளுமையாக வைத்திருக்க தக்காளி உதவுகிறது.
* வீட்டிற்குள் பச்சை நிற மணி பிளான்ட் செடி வைத்தால் குளிர்ச்சியாக இருக்கும்.
* வெளியே செல்லும் போது நல்ல தரமான கூலிங்கிளாஸ் அணியலாம்.
* வெந்தயத்தை மோரில் ஊறவைத்து, மைய அரைத்து, தலைக்கு பூசிக் குளித்தால் உடல் குளிர்ச்சியாக இருக்கும்.
* உணவில் பச்சை வெங்காயம், வெள்ளரி, வாழைத்தண்டு, மோர், புதினா ஆகியவற்றை தவறாமல் சேர்த்துக் கொள்ளுங்கள்.
* சந்தனத்தை பன்னீரில் குழைத்து தினமும் இரவு படுக்கும் முன் முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் வேர்க்குரு உள்ள இடத்தில் பூசலாம்.
* மோரில் சிறிது இஞ்சி, மிளகாய், உப்பு, கொத்தமல்லி தழை போட்டு குடிக்கலாம்.
* காபி, பால் போன்றவற்றை குறைத்து நீராகாரம், இளநீர், பழரசம் பருக வேண்டும்.
* தினமும் பத்து டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
* பருத்தி ஆடைகளே அணிய வேண்டும்.
* மருதாணி பூவை இரவில் தலையணையின் கீழ் வைத்து படுத்து வந்தால் உடல் வெப்பம் குறையும்.
* வெளியே கிளம்பும் போது நெல்லிக்காய் ஒன்றினை வாயில் போட்டு மென்றால் நாக்கு உலர்ந்து போகாது.
* கீரை, நீர்ச்சத்துள்ள காய்கறிகளை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

தொகுப்பு: ஆர்.ராமலெட்சுமி, திருநெல்வேலி.

The post கோடையை குளுமையாக்கலாம்! appeared first on Dinakaran.

Read Entire Article