நன்றி குங்குமம் தோழி
*வெதுவெதுப்பான நீரில் தேன், எலுமிச்சை சாறு, குளுகோஸ் கலந்து பருகினால் உடலுக்கு இதமாக இருக்கும். தாகமும் அடங்கும்.
*ரோஜாப்பூ இதழ்களுடன் பனைவெல்லம் சேர்த்து சாப்பிட்டால் உடல் சூடு குறையும். வாய் மணக்கும்.
*மண்பானை தண்ணீரில் வெல்லம், சுக்குப்பொடி, ஏலப்பொடி கலந்து குடித்தால் கோடைக்கேற்ற சுவையான சத்தான பானம்.
*நீராகாரத்தில் சின்ன வெங்காயம், கேரட் சிறிதாக நறுக்கிப் போட்டு, உப்பு போட்டு காலையில் குடித்தால் உடல் குளிர்ச்சியாகும்.
*நீர் மோரில் தக்காளி பழச்சாறு கலந்து, உப்பு, பெருங்காயம், கொத்தமல்லித் தழை, கறிவேப்பிலை நறுக்கி சேர்த்துப் பருகினால் களைப்பும் சோர்வும் ஏற்படாது.
*நீர் மோரில் வெள்ளரித் துண்டுகள், புதினா சிறிது, எலுமிச்சை சாறு, உப்பு கலந்து குடித்தால் வயிற்றிலுள்ள பிரச்னை தீரும்.
*தர்பூசணி ஜூஸ், இளநீர், கரும்பு ஜூஸ், நுங்கு, முலாம்பழம் முதலியவற்றையும் சாப்பிடலாம்.
*நன்னாரி சர்பத்தில் எலுமிச்சை சாறு, நாட்டுச் சர்க்கரை கலந்து குடித்தால் தாகம் தீரும்.
*நெல்லிக்காய் துண்டுகள், கறிவேப் பிலை, இஞ்சி சிறிது சேர்த்து மிக்ஸியில் அரைத்து வடிகட்டி உப்பு சேர்த்து குடிக்கலாம்.
*செம்பருத்தி இதழ்களை எலுமிச்சை சாறில் ஊறவைத்து, மறுநாள் இடித்து சாறெடுத்து, அதனுடன் நெல்லிச்சாறு, இஞ்சிச்சாறு சிறிது சேர்த்து சர்க்கரை, தண்ணீர் ேசர்த்து குடித்தால் உடல் சூடு குறையும்.
*வெல்லம், ஏலக்காய், புதினா இலைகள் சேர்த்து கொதிக்க வைத்து, வடிகட்டி, ஆறவைத்து குடிக்கலாம்.
தொகுப்பு: எம்.வசந்தா, சென்னை.
The post கோடைக்கு ஏற்ற சத்தான பானம்! appeared first on Dinakaran.