“கொல்லும் நோக்கம் கொண்டோர் கூட இப்படி தாக்கியிருக்க மாட்டார்கள்” - அஜித்குமார் வழக்கில் நீதிபதிகள் வேதனை

9 hours ago 1

மதுரை: “கொலை செய்யும் நோக்கத்தில் வருவோர் கூட இந்த அளவுக்கு தாக்கியிருக்க மாட்டார்கள். உடலில் ஓர் இடம் கூட விடாமல் தாக்கியுள்ளனர்” என மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் உயர் நீதிமன்ற நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயில் காவலர் அஜித்குமாரின் காவல் மரணம் தொடர்பான வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியகிளாட் அமர்வில் இன்று (ஜூலை 1) மதியம் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை முதல்வர் அருள் சுந்தரேஷ் குமார் நேரில் ஆஜராகி அஜித்குமாரின் பிரேதப் பரிசோதனை அறிக்கையை தாக்கல் செய்தார்.

Read Entire Article