கொடைக்கானலில் மாற்று சாலை திட்டத்தினை உடனே செயல்படுத்த வேண்டும்: மமக கூட்டத்தில் தீர்மானம்

7 months ago 24

 

கொடைக்கானல், நவ. 13: கொடைக்கானலில் மனிதநேய மக்கள் கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. நகர செயலாளர் ஆஷிக் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஷேக் அப்துல்லா, மாவட்ட துணை செயலாளர் அஜ்மல் கான் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் கொடைக்கானல் விவசாயிகளின் நலனை பாதிக்கக்கூடிய வன உயிரின சரணாலய திட்டத்தினை கைவிட வேண்டும். வனவிலங்குகள் ஊருக்குள் வருவதை தடுக்க வேண்டும்.

வனவிலங்குகள் சேதப்படுத்தும் விவசாய நிலங்களுக்கு உரிய இழப்பீடு தர வேண்டும். கொடைக்கானல் நகர் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் சாலை அகலப்படுத்தும் பணி மற்றும் மாற்று சாலை திட்டத்தினை உடனடியாக செயல்படுத்த வேண்டும். கொடைக்கானல் தாலுகாவில் இருக்கக்கூடிய மாணவர்களுக்கான அரசு கலை அறிவியல் கல்லூரி திறக்க வழிவகைகளை செய்ய வேண்டும். அரசு விளையாட்டு மைதானத்தினை நகராட்சி கையகப்படுத்தி மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இதில் செயற்குழு நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

The post கொடைக்கானலில் மாற்று சாலை திட்டத்தினை உடனே செயல்படுத்த வேண்டும்: மமக கூட்டத்தில் தீர்மானம் appeared first on Dinakaran.

Read Entire Article