கொடைக்கானலில் ஆபத்தை உணராமல் ரீல்ஸ் எடுத்த இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வனத்துறை முடிவு

1 week ago 8

திண்டுக்கல்: ஆபத்தை உணராமல் ரீல்ஸ்க்காக கொடைக்கானல் குணா குகை தடுப்பு கம்பிகளை கடந்து சென்று வீடியோ எடுத்த இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் அமைந்துள்ள குணா குகை, கடந்த ஆண்டு வெளியான 'மஞ்சுமல் பாய்ஸ்' படத்திற்கு பிறகு மேலும் பிரபலமடையத் துவங்கியுள்ளது. கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகள் தவறவிடாத இடமாக குணா குகை சுற்றுலாத்தலம் உள்ளது. இதனால் மற்ற சுற்றுலாத்தலங்களை விட குணா குகை பகுதியில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகம் காணப்படும். கடந்த இரண்டு மாதங்களில் கோடை விடுமுறையில் மட்டும் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் குணா குகை பகுதிக்கு வந்து சென்றுள்ளனர்.

Read Entire Article