கொடுங்கையூர் எரிஉலை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, வரும் மே 25-ம் தேதி மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படு ம் என வட சென்னை குடியிருப்போர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
வட சென்னை குடியிருப்போர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், கொடுங்கையூரில் அமையும் எரிஉலை திட்டத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த கருத்தரங்கம் சென்னை கொடுங்கையூரில் நேற்று நடைபெற்றது.