கொசு தொல்லையால் அவதிக்குள்ளாகும் சென்னை மக்கள்!

1 week ago 3

சென்னை​யில் ஒழிக்கவே முடியாத பிரச்​சினையாக கொசு தொல்லை உள்ளது. சென்னை மாநகரில் கூவம், அடையாறு, பக்கிங்​ஹாம் கால்​வாய், ஓட்டேரி நல்லா உள்ளிட்ட 30-க்​கும் மேற்​பட்ட நீர்​வழித் தடங்கள் உள்ளன. இவற்றி​லும், பெரும்​பாலான மழைநீர் வடிகால்​களி​லும் 365 நாட்​களும் கழிவுநீர் தேங்​கு​வ​தால், அவற்றில் கொசு உற்பத்​தி​யாகி, ஆண்டு முழு​வதும் கொசுத்​தொல்​லை​யால் மக்கள் அவதிப்​பட்டு வருகின்​றனர். குறிப்பாக பிப்​ர​வரி- மார்ச், ஆகஸ்ட்​-செப்​டம்பர் மாதங்​களில் கொசுத்​தொல்லை அதிகமாக உள்ளது.

சென்னை மாநகரம் முழு​வதும் கடந்த ஒரு மாதமாக கொசுத்​தொல்லை அதிகமாக உள்ளது. வீடு​களுக்குள் கொசு வலை அமைத்​திருந்​தா​லும், வாயில் கதவை திறக்​கும்​போது, கொசுக்கள் உள்ளே வந்து​விடு​கின்றன. படுத்து உறங்​கும்​போது, வலைகள் மீது படும் கை, கால்​களை​யும் கொசுக்கள் பதம்​பார்த்து​ விடு​கின்றன. ரத்தத்தை உறிஞ்சிய கொசுக்கள் பறக்க முடி​யாமல் தரையில் விழுந்து கிடக்​கின்றன. தூங்கி எழும் மக்கள் அதை மிதித்து வீடெங்​கும் ரத்த கறையாக காட்​சி​யளிக்​கிறது. கொசுத் தொல்​லை​யால் குறிப்பாக வட சென்னை மக்கள் இரவில் தூக்​கத்தை தொலைத்து வருகின்​றனர்.

Read Entire Article