கைதியை தாக்கிய சம்பவம்: பெண் டிஐஜி மீதான நடவடிக்கை என்ன? - ஐகோர்ட் கேள்வி

4 months ago 16

சென்னை: வேலூர் சிறை டிஐஜி வீட்டில் திருடியதாக கைதியை தாக்கிய சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட பெண் டிஐஜி உள்ளிட்டோர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அரசுக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

வேலூர் சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக உள்ள கிருஷ்ணகிரியைச் சேர்ந்த சிவக்குமார் என்பவரை சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமி, தனது வீட்டு வேலைக்கு அழைத்து சென்றதாகவும், பின் அங்கு நகை, பணத்தை திருடியதாக குற்றம் சாட்டி அவரை தாக்கி சித்ரவதை செய்ததாகவும் கூறி அவரது தாயார் கலாவதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், சம்பந்தப்பட்ட பெண் டிஐஜி ராஜலட்சுமி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த சிபிசிஐடிக்கு போலீஸாருக்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி.சிவஞானம் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

Read Entire Article