
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட்ஜான் உத்தரவின்படி, மதுவிலக்கு அமலாக்க பிரிவு டி.எஸ்.பி. குருவெங்கட்ராஜ் மேற்பார்வையில், கோவில்பட்டி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மீகா தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் முருகதாஸ் மற்றும் போலீசார் இன்று (3.6.2025) கோவில்பட்டி, தோட்டிலோவன்பட்டி சோதனை சாவடி அருகே ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி வந்த நபரை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர். அதில் அவர் கோயம்புத்தூர், உடையாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஏசுவடியான் மகன் சாமுவேல்ராஜ் (வயது 42) என்பதும் அவர் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.
உடனடியாக மேற்சொன்ன போலீசார் சாமுவேல்ராஜை கைது செய்து அவரிடமிருந்த 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து கோவில்பட்டி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர்.