சென்னை: கேரளாவில் நடந்த கப்பல் விபத்து தொடர்பாக எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். காவல் துறை, தீயணைப்புத் துறை மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஒருங்கிணைத்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். கொச்சி அருகே கப்பல் கவிழ்ந்ததால் ஏற்படும் சுற்றுச்சூழல் தாக்கம் குறித்து ஆய்வு செய்யவும் உத்தரவிட்டுள்ளார். மீன்கள், கடல்வாழ் உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படுமா என மீன்வளத்துறை ஆய்வு செய்ய அறிவுறுத்தியுள்ளார்.
The post கேரளாவில் நடந்த கப்பல் விபத்து தொடர்பாக எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை appeared first on Dinakaran.