திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று திருவனந்தபுரம் உள்பட 4 மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்பதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை இந்தியாவில் வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் தொடங்கும். இந்தாண்டு பருவமழை வழக்கத்தை விட முந்தும் என்று மத்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அந்தமான் நிக்கோபார் தீவுகளில் பருவ மழை தொடங்கி விட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் 4 நாட்களுக்கு முன்னதாக வரும் 27ம் தேதி பருவ மழை தொடரும் என்று மத்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இன்று திருவனந்தபுரம், கோழிக்கோடு, பத்தனம்திட்டா, வயநாடு ஆகிய 4 மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்பதால் இந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
The post கேரளாவில் இன்று 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை appeared first on Dinakaran.