கெம்மாரம்பாளையம் ஊராட்சியில் கழிவுநீர் வடிகால் அமைக்கும் பணி துவக்கம்

7 months ago 24

காரமடை,நவ.17: காரமடையை அடுத்துள்ள கெம்மாரம்பாளையம் ஊராட்சி பகவதி அம்மன் கோவில் பிரிவு பகுதியில் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் கழிவு நீர் வடிகால் அமைக்கும் பணி நேற்று துவங்கியது. இப்பணிகளை மேட்டுப்பாளையம் எம்எல்ஏ ஏ.கே.செல்வராஜ் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் செல்வி நிர்மலா பொன்னுச்சாமி,வார்டு உறுப்பினர்கள் ராமமூர்த்தி, வெள்ளியங்கிரி,அதிமுக ஐடி விங் நிர்வாகி கபிலன் உள்ளிட்ட நிர்வாகிகள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

The post கெம்மாரம்பாளையம் ஊராட்சியில் கழிவுநீர் வடிகால் அமைக்கும் பணி துவக்கம் appeared first on Dinakaran.

Read Entire Article