சென்னை: சென்னை மாநகரில் உள்ள அடையாறு, கூவம், பக்கிங்ஹாம் கால்வாய் கரையோரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி சென்னையில் உள்ள நீர்நிலைகளை பழமை மாறாமல் பாதுகாக்கக்கோரி வி.கனகசுந்தரம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், வி. லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்துள்ள உத்தரவில், நீர்நிலைகளில் ஒருபோதும் ஆக்கிரமிப்புகளுக்கு அனுமதி வழங்கக்கூடாது என உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் பல்வேறு தீர்ப்புகளில் தொடர்ச்சியாக உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. சென்னையில் உள்ள கூவம், அடையாறு மற்றும் பக்கிங்ஹாம் கால்வாய்கள் முழுமையாக ஆக்கிரமிப்பில் உள்ளன.