சென்னை: “கூடுதல் சட்டக் கல்லூரிகளை தொடங்கினால் வழக்கறிஞர்களின் தொழில் வாய்ப்பு பாதிக்கும்” என்று சட்டப்பேரவையில் அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று (மார்ச் 28) கேள்வி நேரத்தின்போது பேசிய அதிமுக எம்எல்ஏ கே.பி.முனுசாமி, “கிருஷ்ணகிரி மாவட்டம் 6 தொகுதிகளை கொண்ட பெரிய மாவட்டம். அங்கு அனைத்து உயர் கல்வி கல்லூரிகளும் இயங்கி வருகின்றன. சட்டக் கல்லூரி மட்டும் இல்லை. எனவே, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரு சட்டக் கல்லூரி தொடங்கப்படுமா?” என கேள்வி எழுப்பினார்.