குவாரி உரிமையாளர்களிடம் சட்டவிரோத பண வசூல்: புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குநர் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

1 week ago 6

சென்னை: குவாரி உரிமையாளர்களிடம் இருந்து சட்டவிரோதமாக பணம் வசூலிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கில், புவியியல் மற்றும் சுரங்கத் துறை இயக்குநர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழ்நாடு குவாரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கே.ஆர் குகேஷ் தாக்கல் செய்துள்ள மனுவில், “குவாரிகளை நடத்துவதற்கு சுரங்க துறை, சுற்றுச்சூழல், தொழில் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அனுமதிகளை பெற்று பல்வேறு இன்னல்களை சந்தித்து குவாரிகளை குவாரி உரிமையாளர்கள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தமிழக அரசின் புவியியல் சுரங்கத்துறை அதிகாரிகளும், புதுக்கோட்டையைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்ற தனிநபரும் குவாரி உரிமையாளர்களிடம் இருந்து சட்டவிரோதமாக கட்டாய வசூல் செய்து வருகின்றனர்.

Read Entire Article