குளச்சல் நகராட்சியில் இருந்து 12 டன் பிளாஸ்டிக் கழிவுகள் சிமென்ட் ஆலைக்கு அனுப்பி வைப்பு

5 months ago 17

குளச்சல், ஜன. 9: குளச்சல் நகராட்சியில் சேகரிக்கப்பட்ட 12 டன் பிளாஸ்டிக் கழிவுகள் திண்டுக்கலில் உள்ள சிமென்ட் ஆலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. குளச்சல் நகராட்சியில் தினமும் சேகரிக்கப்படும் குப்பைகளில் இருந்து மக்கும் குப்பைகள் மற்றும் மக்காத குப்பைகள் தனித்தனியாக பிரித்தெடுக்கப்பட்டு களிமார் உப்பளம் பகுதியில் உள்ள நகராட்சி இயற்கை உரம் தயாரிக்கும் கூடத்தில் சேகரிக்கப்படுகிறது. இதில் மறு சுழற்சி செய்ய இயலாத பிளாஸ்டிக் கழிவுகள் பெருமளவில் சேகரித்து வைக்கப்பட்டது. இதையடுத்து நகராட்சி ஆணையாளர் செந்தில்குமார், நகர்மன்ற தலைவர் நசீர் ஆகியோர் ஆலோசனையின் பேரில் 12.4 டன் பிளாஸ்டிக் கழிவுகள் திண்டுக்கல் சிமென்ட் ஆலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சுகாதார ஆய்வாளர் பொன் வேல்ராஜ் மற்றும் தூய்மை பணியாளர்கள் அனுப்பி வைத்தனர்.

The post குளச்சல் நகராட்சியில் இருந்து 12 டன் பிளாஸ்டிக் கழிவுகள் சிமென்ட் ஆலைக்கு அனுப்பி வைப்பு appeared first on Dinakaran.

Read Entire Article