குளச்சல், பிப்.17: குளச்சல் அருகே உள்ள கணியாகுளம் பண்டாரவிளையை சேர்ந்தவர் எட்வின் ஜெயக்குமார் (60). இவர் சம்பவத்தன்று பைக்கில் திங்கள்நகரில் இருந்து குளச்சல் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது கல்லுகூட்டம் பேரூராட்சி அலுவலகம் அருகே உள்ள சாலையில் சென்றபோது எதிரே ஆலங்கோடு பகுதியை சேர்ந்த சந்திர சேவியர் மகன் ரெஜன் விஷால் (19) என்பவர் ஓட்டி வந்த பைக் மோதியது.
இந்த விபத்தில் கீழே விழுந்து எட்வின் ஜெயக்குமார் படுகாயம் அடைந்தார். ரெஜன் விஷால் காயங்கள் இன்றி தப்பினார். அக்கம் பக்கத்தினர் எட்வின் ஜெயக்குமாரை மீட்டு உடையார்விளையில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின்பேரில் குளச்சல் போலீசார் ரெஜன் விஷால் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post குளச்சல் அருகே பைக்குகள் மோதல் முதியவர் படுகாயம்: வாலிபர் மீது வழக்கு appeared first on Dinakaran.