சென்னை: குற்றச் செயல்களை தடுக்க தவறும் போலீஸ் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிபி சங்கர் ஜிவால் எச்சரித்துள்ளார். திருநெல்வேலியில், ஓய்வு பெற்ற போலீஸ் எஸ்ஐ ஜாகீர் உசேன் 2 தினங்களுக்கு முன்னர் படுகொலை செய்யப்பட்டார்.
இதேபோல் சேலத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி ஜான், ஈரோட்டில் காரில் சென்றபோது கொலை செய்யப்பட்டார். இச்சம்பவங்கள் தமிழகம் முழுவதும் அதிர்வலை களை ஏற்படுத்தியது.
இக்கொலைகளுக்கு எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்ததோடு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டுவிட்டதாக குற்றம்சாட்டினர்.