குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு ஜிப்மர் வெளிப்புற சிகிச்சை பிரிவு மூடல்

6 months ago 18

புதுச்சேரி, நவ. 16: குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு 16ம் தேி(நேற்று) புதுச்சேரி ஜிப்மர் வெளிப்புற நோயாளிகள் சிகிச்சை பிரிவு இயங்காது. எனவே, நோயாளிகள் வெளிப்புற சிகிச்சை பிரிவுக்கு வருவதை தவிர்க்குமாறும், அவசர பிரிவு சேவைகள் அனைத்தும் வழக்கம் போல் இயங்கும் என ஜிப்மர் இயக்குனர் ஏற்கனவே தெரிவித்திருந்தார். இந்நிலையில் நேற்று விடுமுறை என்று தெரியாமல் வெளிப்புற சிகிச்சைக்காக விழுப்புரம், கடலூர் மற்றும் சுற்று வட்டாரங்களில் இருந்து வந்த பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர். மேலும் சிறிது நேரம் ஜிப்மர் மருத்துவமனை நுழைவு வாயிலில் காத்திருந்த நோயாளிகள் பின்னர் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் சென்றனர்.

The post குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு ஜிப்மர் வெளிப்புற சிகிச்சை பிரிவு மூடல் appeared first on Dinakaran.

Read Entire Article