தேன்கனிக்கோட்டை, ஜன.25: தேன்கனிக்கோட்டை பேரூராட்சி அலுவலகம் முன் டாலர் காலனி குடியிருப்புவாசிகள், பைககளில் குப்பை கொண்டு வந்து போராட்டம் நடத்தினர். தேன்கனிக்கோட்டை பேரூராட்சி அலுவலகம் முன்பு நேற்று காலை டாலர் காலனி பகுதியில் வசிக்கும் குடியிருப்புவாசிகள், தங்கள் வீடுகளில் குப்பை சேகரிக்க தூய்மை பணியாளர்கள் வருவதில்லை என கூறி, குப்பைகளை பிளாஸ்டிக் பைகளில் கொண்டு வந்து வந்தனர். பின்னர் பேரூராட்சி அலுவலகம் முன்பு, குப்பைகளுடன் அமர்ந்து போராட்டம் நடத்தினர். இது குறித்து தகவல் அறிந்த துப்புரவு மேற்பார்வையாளர் வனிதா சம்பவ இடத்திற்கு சென்று, டாலர் காலணி பகுதிக்கு குப்பை சேகரிக்க தனியாக வண்டி அனுப்புவதாக கூறி சமாதானம் செய்தார். அதன் பின்னர் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
The post குப்பை கழிவுகளுடன் மக்கள் போராட்டம் appeared first on Dinakaran.