*கலெக்டர் வழங்கினார்
குன்னூர் : குன்னூரில் நடைபெற்ற ஜமாபந்தியில் 13 பயனாளிகளுக்கு ரூ.18.09 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு வழங்கினார்.
நீலகிரி மாவட்டம், குன்னூர் வட்டத்திற்கான கேத்தி,அதிகரட்டி ஆகிய பேரூராட்சிகளுக்கு ஜமாபந்தி குன்னூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் 5 பயனாளிகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய ரேஷன் கார்டுகளையும், சமூக பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் 2 நபர்களுக்கு ஈமச்சடங்கு உதவிதொகை பெறுவதற்கான ஆணைகளையும், தமிழ்நாடு தூய்மைப் பணியாளர் நல வாரியத்தின் சார்பில் 4 நபர்களின் வாரிசுதாரர்களுக்கு கல்வி உதவித்தொகை உள்ளிட்ட உதவித்தொகைகளையும், தாட்கோ மூலம் 2 பயனாளிகளுக்கு முதலமைச்சரின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான தொழில் முனைவு திட்டத்தின் கீழ் சுற்றுலா வாகனம் வாங்குவதற்கும் மற்றும் துணிக்கடை அமைப்பதற்கும் மானியத்துடன் கடன் உதவி பெறுவதற்கான நிர்வாக அனுமதி என மொத்தம் 13 பயனாளிகளுக்கு ரூ.18.09 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அதனை தொடர்ந்து பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 160 மனுக்களை பெற்று கொண்டு, அந்த மனுக்களை துறை சார்ந்த அலுவலர்களிடம் வழங்கி, உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.
முன்னதாக நிலஅளவை மேற்கொள்ளும் பணிகளுக்கு பயன்படுத்தும் பொருட்களான சங்கிலி, ஊசி, க்ராஸ்டாப் உள்ளிட்ட பொருள்களை நேரில் பார்வையிட்டு, அதன் பயன்பாடுகளை குறித்து சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.ஜமாபந்தி நிகழ்ச்சியில் மாவட்ட வழங்கல் அலுவலர் சரவணன், மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் பழனிசாமி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சதானந்த கல்கி, குன்னூர் நகராட்சி ஆணையாளர் இளம்பரிதி, மாவட்ட சமூக நல அலுவலர் பிரவீனா தேவி,மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் குப்புராஜ்,
மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ஞானராஜ்,தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் நவனீதா, மாவட்ட சுற்றுலா அலுவலர் துர்கா தேவி, குன்னூர் வட்டாட்சியர் ஜவஹர், சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாச்சியர் காயத்ரி, குன்னூர் வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயா, பேரூராட்சி செயல் அலுவலர்கள் செந்தில்குமார்(ஜெகதளா),புவனேஷ்வரி(கேத்தி) உள்ளிட்ட அரசு துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இன்று (10ம் தேதி) கலெக்டர் குன்னூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மேலூர், உலிக்கல், உபதலை, ஆகிய பகுதிகளில் பராமரிக்கப்படும் பல்வேறு பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
The post குன்னூரில் ஜமாபந்தி 13 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் appeared first on Dinakaran.