ஊட்டி,பிப்.17: குந்தா மற்றும் கெத்தை மின் நிலையங்களில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆய்வு செய்தார். நீலகிரி மாவட்டத்தில், குந்தா நீர்மின் நிலையம் – 1, கெத்தை நீர்மின் நிலையம் – 2 ஆகிய அணைகளை மாவட்ட பொறுப்பு அமைச்சரான தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேரில் பார்வையிட்டார்.
பின்னர் அங்கு நீர் மின் நிலையம் செயல்படும் விதம் மற்றும் அதன் மின் உற்பத்தி அளவு, அணையின் கொள்ளளவு, கோடை கால மின் உற்பத்திக்கு நீர் இருப்பு தேவையான அளவு உள்ளதா என்பது குறித்தும், பில்லூர் அணையில் இருந்து கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்திற்கு வழங்கப்பட்டு வரும் குடிநீர் திட்டம் குறித்தான விவரங்களையும் அலுவலர்களிடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது மேற்பார்வை பொறியாளர் (குந்தா நீர்மின் உற்பத்தி வட்டம்) முரளி, கெத்தை மின் நிலைய செயற்பொறியாளர் அனந்தநாராயணன், உதவி பொறியாளர் ரவி உட்பட பலர் உடனிருந்தனர்.
The post குந்தா, கெத்தை மின் நிலையங்களில் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் ஆய்வு appeared first on Dinakaran.