சென்னை: கொளத்தூர் தொகுதியில் வடசென்னை வளர்ச்சி திட்டத்தின்கீழ் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளை துரிதப்படுத்தும் வகையில் அமைச்சர் சேகர்பாபு நேரில் சென்று ஆய்வு செய்தார். குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் ஆகஸ்ட் மாதம் இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழும தலைவருமான பி.கே.சேகர்பாபு தகவல் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் அவர்களின் நல்வழிகாட்டுதலின்படி இன்று வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழும தலைவருமான சேகர்பாபு அவர்கள் கள ஆய்வு மேற்கொண்டார். அந்த வகையில் திரு.வி.க.நகர் பேருந்து நிலையம், அகரம், ஜெகநாதன் தெருவில் கட்டப்பட்டு வரும் இரத்த சுத்திகரிப்பு மையம், பெரியார் நகர் பேருந்து நிலையம், பேப்பர் மில்ஸ் சாலையில் கட்டப்பட்டு வரும் புதிய நவீன சந்தை மற்றும் பேப்பர் மில்ஸ் சாலையில் கட்டப்பட்டு வரும் புதிய வட்டாட்சியர் அலுவலகம், சார்பதிவாளர் அலுவலகம், பகிர்ந்த பணியிட மையம் எனப்படும் மக்கள் சேவை மையத்தை ஆய்வு செய்தார்.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகர்பாபு அவர்கள் செய்தியாளர்களிடம் பேசும்போது தெரிவித்ததாவது :
40-50 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட பேருந்து நிலையங்களில், பயணிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் திட்டமிடல் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக தண்டையார்பேட்டை பேருந்து நிலையம், திருவிகப் பேருந்து நிலையம், திருவிக நகர் பேருந்து நிலையம், அம்பத்தூர், பெரியார் நகர், முல்லை நகர், உதயசூரியன் நகர் உள்ளிட்ட 13 பேருந்து நிலையங்களில், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் சார்பில் மேம்பாட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
இந்த ஆட்சி அமைந்த பிறகு, மகாபலிபுரம், செங்கல்பட்டு, ஆவடி, டி.நகர் ஆகிய இடங்களில் புதிய பேருந்து நிலையங்கள் உருவாக்கப்படுகின்றன. முதல்வர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, பெரியார் நகர் மற்றும் திரு.வி.க.நகர் பேருந்து நிலையங்களை மேம்படுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்தப் பணிகள் ஜூலை மாதம் 2025க்குள் முடிந்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.
இன்றைய தினம், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் காகர்லா உஷா, இ.ஆ.ப., சென்னை மேயர் ஆர்.பிரியா ராஜன், சென்னைப் பெருநகர் வளர்ச்சி குழுமத்தின் சி.இ.ஓ. சிவஞானம், இ.ஆ.ப., மாநகராட்சி மத்திய வட்டார துணை ஆணையாளர் கே.ஜே.பிரவீன் குமார், இ.ஆ.ப. மற்றும் துறைசார்ந்த அதிகாரிகளுடன் பேருந்து நிலையங்களை ஆய்வு செய்தனர். மேலும், ஏழை எளிய மக்களுக்கு இலவச டயாலிசிஸ் சென்டர்கள், துறைமுகம் மற்றும் கொளத்தூர் பகுதிகளில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் பணிகளையும் விரைவாக முடிக்க அதிகாரிகள் ஆலோசனைகள் வழங்கியுள்ளனர்.
சென்னைப் பெருநகர் வளர்ச்சி குழுமத்தின் சார்பில், பழைய காலத்தில் (பக்தவச்சலம், காமராஜ் ஆகிய தலைவர்களின் ஆட்சிக் காலத்தில்) கட்டப்பட்ட பள்ளிகள், சந்தைகள், உடற்பயிற்சி கூடங்கள் போன்ற அமைப்புகளும் மறு கட்டமைப்பில் கொண்டு வரப்பட்டு வருகின்றன. இத்தகைய 80 மேம்பாட்டு திட்டங்களும் டிசம்பர் 2025 அல்லது ஜனவரி 2026க்குள் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
வட சென்னை வளர்ச்சி திட்டம்:
வட சென்னை மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களின் சிந்தனையில் உருவான வளர்ச்சி திட்டம் முன்னேற்றம் அடைந்து வருகிறது. இந்த திட்டத்திற்கான அனைத்து பணிகளும் நிறைவடைந்தபின், வட சென்னை மக்களுக்கு முழுமையான சேவைகள் கிடைக்கும் என நம்பிக்கை இருக்கிறது.
“குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் ஆகஸ்ட் மாதம் இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்கள் தெரிவித்துள்ளார். வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் திருமதி.காகர்லா உஷா, இ.ஆ.ப., அவர்கள், தொடர்ந்து ஆலோசனை கூட்டங்களை நடத்தி பணிகளை விரைவுபடுத்தி வருகிறார். இது அரசியல் குற்றச்சாட்டு எனக் கருதக் கூடாது. ஆரம்பகட்ட கட்டமைப்பில் பயணிகளின் தேவைகள் பரிசீலிக்கப்படாமல் உருவாக்கப்பட்டதால், சில தொழில்நுட்பப் பிழைகள் மற்றும் துறை ஒருங்கிணைப்பு தேவைப்பட்டதால் காலதாமதம் ஏற்பட்டது. பேருந்து நிலையம் திறந்த பிறகு ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசல், மழைக்காலங்களில் தண்ணீர் தேக்கம், அடிப்படை வசதிகள் ஆகியவற்றை கணக்கிட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முதல்வர் அவர்கள் தொடர்ந்து ஆய்வுக் கூட்டங்கள் நடத்தி பணிகளை விரைவுபடுத்த உத்தரவிட்டு வருகிறார்.
சென்னை பெருநகர வளர்ச்சி குழும சார்பில் 13 பேருந்து நிலையங்களை மேம்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. மகாபலிபுரம் செங்கல்பட்டு ஆவடி மற்றும் தீநகர் உள்ளிட்ட பகுதிகளில் மேம்படுத்தப்பட்டு வரும் பேருந்து நிலையங்கள் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் முத்திரைகளாக உருவாக்கப்பட்டு வருகிறது. பெரியார் நகர் மற்றும் திரு.வி.க. நகர் பேருந்து நிலையங்களை மேம்படுத்தும் பணி துவக்கப்பட்டு அடுத்த மாதம் ஜூலை இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. ஏழை எளிய மக்களுக்கு கட்டணம் இல்லாமல் டயாலிசிஸ் சென்டர் உருவாக்கப்பட்டு துறைமுகம் மற்றும் கொளத்தூரில் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் பணிகள் அனைத்தும் நிறைவேறும் பொழுது வட சென்னை மக்களின் தேவைகள் ஓரளவுக்கு பூர்த்தி ஆகி இருக்கும். இந்த ஆய்வுகளின்போது மேயர் ஆர்.பிரியா ராஜன் அவர்கள், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் காகர்லா உஷா, இ.ஆ.ப., அவர்கள், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழும முதன்மைச் செயல் அலுவலர் அ.சிவஞானம், இ.ஆ.ப., அவர்கள், மாநகராட்சி மத்திய வட்டார துணை ஆணையாளர் கே.ஜே.பிரவீன் குமார், இ.ஆ.ப., அவர்கள், மண்டலக் குழுத்தலைவர் சரிதா மகேஷ்குமார், சி.எம்.டி.ஏ. தலைமைத் திட்ட அமைப்பாளர் எஸ்.ருத்ரமூர்த்தி, தலைமைப் பொறியாளர் மகாவிஷ்ணு, கண்காணிப்பு பொறியாளர்கள் ராஜமகேஷ்குமார், பாலமுருகன், ஏ.எஸ்.முருகன், செயற்பொறியாளர்கள் ராஜன்பாபு, சரவணன், உள்ளாட்சி பிரதிநிதிகள் ஐசிஎப்.முரளிதரன், சந்துரு, மகேஷ்குமார், மாமன்ற உறுப்பினர்கள் நாகராஜன், தாவூத்பீ, அமுதா, யோகபிரியா மற்றும் அரசு அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.
The post குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் ஆகஸ்ட் மாதம் இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்: அமைச்சர் சேகர்பாபு தகவல் appeared first on Dinakaran.