குத்தகை காலம் முடிந்துவிட்டால் உடனடியாக மதுபான கடைகளை காலி செய்து கொடுக்க அதிகாரிகளை அறிவுறுத்த வேண்டும்: ஐகோர்ட்

2 months ago 12

தமிழகம் முழுவதும் குத்தகை காலம் முடிவடைந்து விட்டால் சம்பந்தப்பட்ட மதுபானக் கடைகளை உடனடியாக காலி செய்து கொடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும் என டாஸ்மாக் நிர்வாக இயக்குநருக்கு உயர் நீதிமன்ற நீதிபதி பி.வேல்முருகன் உத்தரவிட்டுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி காமன்தொட்டியை சேர்ந்த சுந்தர் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘எனக்கு சொந்தமான கட்டிடத்தில் இயங்கி வரும் டாஸ்மாக் மதுபானக் கடைக்கான ஒப்பந்த காலம் முடிவடைந்து விட்டதால் காலி செய்து கொடுக்கும்படி கூறினேன். அதன்காரணமாக கிருஷ்ணகிரி மாவட்ட டாஸ்மாக் மேலாளர் சுந்தரின் தூண்டுதலின்பேரில் எனது பேக்கரியில் திருட்டுத்தனமாக மதுபான விற்பனையில் ஈடுபட்டதாகக் கூறி என் மீது போலீஸார் பொய் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். எனவே, என் மீதான வழக்கை ரத்து செய்து, என்னுடைய கடையில் இயங்கி வரும் மதுபானக் கடையையும் காலி செய்து கொடுக்க உத்தரவிட வேண்டும்’ என கோரியிருந்தார்.

Read Entire Article