குண்டர் தடுப்பு சட்டத்தில் 2 வாலிபர்கள் கைது

1 week ago 4

கடலூர், பிப். 14: கடலூர் திருப்பாதிரிப்புலியூரை சேர்ந்தவர்கள் துரைராஜ் மற்றும் பிரகாஷ். இவர்கள் இருவரும் திருப்பாதிரிப்புலியூர் தண்டபாணி நகரில் வெல்டிங் வேலை செய்து வருகின்றனர். சம்பவத்தன்று இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர், துரைராஜ் மற்றும் பிரகாஷ் சென்ற மோட்டார் சைக்கிளை உரசியபடி சென்றுள்ளனர். இதுகுறித்து கேட்டபோது அந்த இரண்டு வாலிபர்களும் துரைராஜ் மற்றும் பிரகாசை ஆபாசமாக திட்டி தாங்கள் வைத்திருந்த கத்தியை எடுத்து இருவரையும் தலையில் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இது குறித்த புகாரின்பேரில் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கம்மியம்பேட்டையை சேர்ந்த சுரேஷ் மகன் கவுசிக் (19), குப்புசாமி மகன் ஜீவானந்தம் (24) ஆகியோரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட ஜீவானந்தம் மீது திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலையத்தில் சரித்திர குற்ற பதிவேடு பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும் கொலை, கொலை முயற்சி, வழிப்பறி என 3 வழக்குகளும், கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் 2 வழிப்பறி வழக்குகளும் என மொத்தம் 5 வழக்குகள் உள்ளன. கவுசிக் மீது மொத்தம் 4 வழக்குகள் உள்ளன. இவர்களின் குற்றச்செயலை கட்டுப்படுத்தும் பொருட்டு கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பரிந்துரையின்பேரில், கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ஓராண்டு காலம் குண்டர் தடுப்பு காவலில் வைக்க ஆணையிட்டதன்பேரில் ஜீவானந்தம், கவுசிக் ஆகியோர் குண்டர் தடுப்பு காவலில் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

The post குண்டர் தடுப்பு சட்டத்தில் 2 வாலிபர்கள் கைது appeared first on Dinakaran.

Read Entire Article