கரூர், ஜூன். 25: கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அருகே பல்வேறு பகுதிகளில் பெட்டிக்கடை, டீக்கடைகளில் குட்கா பொருட்கள் பதுக்கி வைத்து விற்பதாக 3 பேரை போலீசார் கைது செய்தனர். நேற்று முன்தினம், கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சில பகுதிகளில் உள்ள டீக்கடை மற்றும் பெட்டிக்கடைளில் குட்கா பொருட்களை மறைத்து வைத்து விற்பனை செய்ய முயன்றதாக ராஜூ, ரமேஷ், விஜயகுமார் 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்து விசாரிக்கின்றனர். மேலும், அவர்களிடம் இருந்து 600 கிராம் எடையுள்ள குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.
The post குட்கா விற்பனை செய்த 3 பேர் கைது appeared first on Dinakaran.