குட்கா வழக்கில் சிபிஐ பதிலளிக்க உத்தரவு: சென்னை சிறப்பு நீதிமன்றம்

2 days ago 2


சென்னை: குட்கா வழக்கில் பெண் டிரைவ் மூலம் வழங்கிய கூடுதல் குற்றப்பத்திரிக்கை குறித்து சிபிஐ பதிலளிக்க ஆணை பிறப்பித்துள்ளது. கூடுதல் குற்றப்பத்திரிகையில் பல தகவல் இல்லை என்பது தொடர்பான புகாருக்கு சிபிஐ பதிலளிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டது. அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து தடையை மீறி குட்கா விற்பனை செய்ததாக சிபிஐ வழக்கு தொடரப்பட்டது. முன்னாள் அமைச்சர்கள் பி.வி.ரமணா, சி.விஜயபாஸ்கர் உள்ளிட்ட 26 பேருக்கு எதிராக சிபிஐ வழக்கு தொடரப்பட்டது. சிபிஐ பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஏப்.25க்கு சென்னை சிறப்பு நீதிமன்றம் ஒத்திவைத்தது.

The post குட்கா வழக்கில் சிபிஐ பதிலளிக்க உத்தரவு: சென்னை சிறப்பு நீதிமன்றம் appeared first on Dinakaran.

Read Entire Article