குஜராத்: வாகனங்கள் மீது பேருந்து மோதி விபத்து.. குழந்தைகள் உட்பட 7 பேர் பலி

2 hours ago 6

அகமதாபாத்,

குஜராத் மாநிலம் துவாரகாவில் இருந்து அகமதாபாத் நோக்கி பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது சாலையில் கால்நடை குறுக்கே வந்ததால், அதன் மீது மோதாமல் இருக்க டிரைவர் பேருந்தை திருப்பியுள்ளார்.

அப்போது தடுப்பு சுவர் மீது மோதிய பேருந்து, எதிரே வந்த மினி பேருந்து, கார் மற்றும் மோட்டார் சைக்கிள் மீது அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், மினி பேருந்தில் பயணம் செய்த 6 பேர், பேருந்தில் ஒருவர் என மொத்தம் 7 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் 4 பேர் குழந்தைகள் ஆவர். நேற்றிரவு 7.45 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உயிரிழந்தவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கான மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Read Entire Article