கிழக்கு கடற்கரை சாலை​யில் உள்ள 13 மீனவ கிராமங்களுக்கு மின்​சாரம் வழங்க நடவடிக்கை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

4 months ago 16

சென்னை: கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள 13 மீனவ கிராமங்களுக்கு முழுவதுமாக மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை சோழிங்கநல்லூர் அக்கரை பகுதியில் உத்தண்டி முதல் ஊரூர் வரை 13 மீனவக் குடியிருப்பை சார்ந்த பஞ்சாயத்தார்களிடம் குறைக்கேட்பு முகாம் மீனவர் நலத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் நேற்று நடைபெற்றது. சோழிங்கநல்லூர் தொகுதி எம்எல்ஏ அரவிந்த் ரமேஷ், வேளச்சேரி தொகுதி எம்எல்ஏ அசன் மவுலானா, மீனவர் நலத்துறை இயக்குநர் இரா.கஜலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Read Entire Article