கிருஷ்ணராயபுரம் பகுதியில் ட்ரோன் பயன்பாடு குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு

2 hours ago 1

*செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது

கிருஷ்ணராயபுரம் : கிருஷ்ணராயபுரம் பகுதியில் தனியார் கல்லூரி சார்பில் விவசாயிகளுக்கான ட்ரோன் விழிப்புணர்வுமற் றும் நேரடி செயல்முறைவிள க்கம் முகாம் நடைபெற்றது.

கரூர் வள்ளுவர் அறிவியல் மற்றும் வேளாண்மை கல்லூரியின் இயற்பியல்துறை மற்றும் நோவா ஏரோஸ்பேஸ் இணைந்து நடத்திய விவசாய புரட்சி 5.0 திட்டத்தின் மூலம் கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் திருக்காம்புலியூர் ஊராட்சிக்குட்பட்ட செக்கணம் பகுதியில் உள்ள விவசாயிகள் தங்கள் விவசாய சாகுபடி நிலத்தில் விவசாயத்திற்கான ட்ரோன் பயன்படுத்தும் விழிப்புணர்வு மற்றும் நேரடி செயல்முறை விளக்க முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சி க்கு கல்லூரி தாளாளர் செங்குட்டுவன் தலைமை வகித்தார்.

இயற்பியல்துறை தலைவர் பேராசிரியர் நாகராஜன் முன்னிலை வகித்தார்.விவசாயிகளிடம் நோவா ஏரோஸ்பேஸ்நிறு வனத்தினர் ட்ரோன்மூலம் விவசாய நிலத்தில் பூச்சிக்கொல்லி மற்றும் களைக்கொல்லி போன்ற மருந்துகளை தெளிப்பது என்பதை நேரடியாக விவசாய நிலத்தில் பயிர்கள் மீது தெளி த்து செயல்முறை விளக்கம் அளித்தனர்.

மேலும் அவர்கள் கூறுகையில், விவசாயத்திற்கான ட்ரோன் பயன்படுத்துவதால் தண்ணீர், மருந்து, கூலி போன்றவை செலவினங்கள் குறைந்த அளவே தேவைப்படும், அதாவது ஒரு ஏக்கருக்கு 120 லிட்டர் தண்ணீர் தேவைப்படும் எனில் டிரோன் பயன்படுத்துவதால் 15 லிட்டர் மட்டுமே தண்ணீர் தேவைப்படுகிறது, 2000 ரூபாய் மரு ந்து வாங்க வேண்டிய நிலை யில் இருந்து 500 ரூபாயில் மருந்து வாங்கினால் போதுமானது. மேலும் ஒரு மணி நேரத்திற்கு பதிலாக 6 நிமிட த்தில் மருந்து அடித்து விடலாம் என தெரிவித்தனர்.

கல்லூரியின் தாளாளர் செங்குட்டுவன் கூறுகையில், விவசாய உற்பத்தியை பெருக்கும் வழிமுறைகள் குறைந்த செலவில் அதிக நிலத்திற்கு மருந்து தெளித்தல் குறித்த மற்றும் குறைந்த நேரத்தில் மருந்து தெளித்தல் ஆட்கள் பற்றாக்குறை யை சரி செய்தல் மேலும் விவசாயிகளுக்கு ட்ரோன் மூலம் மருந்து தெளிப்பதற்கு மானிய விலையில் எமது கல்லூரி மூலம் விவசாயிகள் பயன்பெற ஏற்பாடு செய்து தரப்படும் என கூறினார்.

நிகழ்ச்சியில் நோவா ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சுரேஷ்குமார், தலைமை தொழில்நுட்ப அலுவலர் சுந்தர், சந்தையிடுதல் மற்றும் விற்பனை பிரிவு துணைத் தலைவர் அபிஷேக், தலைமை நிர்வாக அலுவலர் சத்திய பிரியன், கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் விவசாயிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post கிருஷ்ணராயபுரம் பகுதியில் ட்ரோன் பயன்பாடு குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Read Entire Article